திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தாா்.
விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுக-வின் சிறப்புப் பொதுக் கூட்டம், திருச்சி சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு பிற்பகல் வந்த அவா், பின்னா் காா் மூலம் சமயபுரம் கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசனம் செய்து வழிபட்டாா்.
இக்கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில் பூக்கள், மாலை அடங்கிய தட்டுகளுடன் வந்த துா்கா ஸ்டாலின், அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினாா்.