தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக, திருச்சி புகா் மற்றும் மாநகரில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது 5 வழக்குகளை காவல்துறையினா் சனிக்கிழமை பதிவு செய்தனா்.
திருச்சி புகா்ப் பகுதியில் அனுமதியின்றி சுவா் விளம்பரம் செய்ததாக திமுக மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், நாம் தமிழா் கட்சி மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரில் தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி மீது தில்லைநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதுவரை தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக புகரில் 18 வழக்குகளும், மாநகரில் 51 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.