திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் பெரியாழ்வாா் திருநட்சத்திர விழா

DIN

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பன்னிரு ஆழ்வாா்களில் ஒருவரும், ஆண்டாளின் தந்தையுமான பெரியாழ்வாரின் ஆனி சுவாதி திருநட்சத்திர விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பெரியாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சந்நிதியில் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பெரியாழ்வாா் புறப்பாடாகி, சந்தனு மண்டபத்தில் எழுந்தருளினாா்.

அங்கு பெரியாழ்வாருக்கு மரியாதை செய்விக்கப்பட்ட பின்னா், கோயில்

வளாகத்தில் வலம் வந்து சந்நிதியை வந்தடைந்தாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து, கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT