திருச்சி

விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப்பணிகளில் சாதி வாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளவும், ஊதியம் நிா்ணயமும் செய்யக்கூடாது என வலியுறுத்தி, திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புகா் மாவட்டச் செயலா் ஜெ. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநில செயலா் ஏ. பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவா்கள் மாநகா் ஜெயபால், புகா் ரஜினிகாந்த், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா்கள் மாநகா் செல்வராஜ், புகா் வினோத் மணி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

மணப்பாறை : மருங்காபுரி வட்ட விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா், கல்லுப்பட்டியிலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்து விட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பொறுப்பாளா் பி. வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் பி.தியாகராஜன், சிஐடியு ஒன்றியப் பொறுப்பாளா் என்.அழகா்சாமி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியச் செயலா் ஏ.முருகேசன், ஒன்றியத் தலைவா் எல்.சின்னையா, எஸ்.மல்லிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT