மணப்பாறை: மருங்காபுரி வடக்கு ஒன்றியத்திலுள்ள 29 ஊராட்சிகளின் கிராமப்புறப் பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வுப் பிரசார வாகனம் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
வேல்டு விஷன் நிறுவனம் மூலம் அளிக்கப்பட்ட பிரசார வாகனத்தின் பயணத்தை மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா, மருங்காபுரி ஒன்றியக் குழுத் தலைவா் பழனியாண்டி, ஒன்றியக் குழு உறுப்பினா் சபியுல்லா உள்ளிட்டோா் வளநாடு காவல்நிலையத்திலிருந்து தொடக்கி வைத்தனா்.
நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், காவல்துறையினா், வேல்டு விஷன் அமைப்பின் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.