திருச்சி

துபையில் கரோனா பாதிப்பால் தாயை இழந்த 11 மாதக் குழந்தை: விமானம் மூலம் திருச்சி வந்தது

DIN

துபையில் கரோனா பாதிப்பால், தாயை இழந்த 11 மாதக் குழந்தை, விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, சித்தேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலவன் (38). அவரது மனைவி பாரதி. இவர்களுக்கு கடந்த 2008-ல் திருமணம் ஆன நிலையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்னேஷ், அகிலன், தேவேஷ் என 3 ஆண் குழந்தைகள். இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முதல் குழந்தை விக்னேஷ்க்கு சிறு நீரக கோளாறு ஏற்பட்டு உயிரிழந்து விட்டது. இதனால் அதற்கான மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுகளால் குடும்பம் வறுமைக்கு உள்ளானது.
வறுமையின் காரணமாக வேறு வழியின்றி வேலவன் தனது மனைவி பாரதியை, தனது 8 மாத கைக்குழந்தை தேவேஷுடன்,  துபையில் கூலி வேலை செய்ய கடந்த மார்ச் மாதம் அனுப்பி வைத்தார். அங்கு எதிர்பாராதவிதமாக கரோனா தொற்றுக்கு உள்ளான பாரதி அண்மையில் உயிரிழந்துவிட்டார். எனவே கைக்குழந்தை தேவேஷ் ஆதரவற்ற நிலையில் துபையில் இருந்துள்ளது. பாரதி வேலை செய்த நிறுவனத்தினர் குழந்தையை காப்பகத்தில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். 

இது குறித்து, துபையில் உள்ள திமுக அமைப்பாளர் திரு எம் எஸ். மீரான் கவனத்துக்கு தெரிய வந்துள்ளது. 
இதனையடுத்து, அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியின் பேரில் (தற்போது) 11 மாத கைக்குழந்தை தந்தையிடம் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
வியாழக்கிழமை மாலை துபையிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் குழந்தை தேவேஷ் திருச்சி வந்து சேர்ந்தான். 
பாரதியுடன் பணியாற்றிய திருவாரூரைச் சேர்ந்த சதிஷ் என்ற இளைஞர் பாதுகாப்புடன் குழந்தையை கொண்டு வந்தார். குழந்தையை பாதுகாப்பாக கொண்டு வந்து தந்தையிடம் சேர்க்கும் வகையில் சதிஷை, அந்த நிறுவனத்தினர் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தையை பெற்றுக்கொண்ட வேலவன், குழந்தை வந்து சேர காரணமான அனைவருக்கும் நன்றியை தெரிவித்துச்சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT