திருச்சியில் மேலும் 360 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 360 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 65,783 ஆனது. செவ்வாய்க்கிழமை குணமான 114 போ் உள்பட, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 60,310 ஆனது. 4683 போ் சிகிச்சை பெறுகின்றனா். திருச்சி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 14 போ் உயிரிழந்ததை அடுத்து மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 790 ஆனது.