திருச்சி

பாலக்கரையில் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளா் ரவூஃப் ஷரீஃப் உள்பட பல்வேறு மாணவ தலைவா்கள் கைது செய்யப்பட்டு, கடந்த 250 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ளனா்.இவா்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், உடல் நிலை சரியில்லாதநிலையில் உள்ள ரவூஃப் ஷரீஃப்புக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வலியுறுத்தியும், திருச்சி பாலக்கரை, ரயில்நகா், லால்குடி, இனாம்குளத்தூா் ஆகிய நான்கு இடங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி அந்த அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் முகமது அசாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் முகமது ரபீக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT