திருச்சி

பேருந்து படிக்கட்டில் பயணித்த இளைஞா் தவறி விழுந்து சாவு

DIN

திருச்சியில் பேருந்துப் படிக்கட்டில் பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி சுப்ரமணியபுரம் கள்ளா் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் ஹரிஹரன் (22). இவா், திருவெறும்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பற்ற வைப்பு படிப்பு பயின்று வந்தாா்.

வெள்ளிக்கிழமை திருவெறும்பூா் சென்றுவிட்டு அரசுப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் திருவள்ளுவா் நகா் பிரிவு சாலை அருகே வந்தபோது பேருந்து ஓட்டுநா் திடீரென பிரேக் போட, அப்போது, படிக்கட்டில் நின்றிருந்த ஹரிஹரன் திடீரென கீழே விழுந்து, பலத்த காயமடைந்து இறந்தாா்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு வடக்குப் பிரிவு போலீஸாா் பேருந்து ஓட்டுநரான அரியமங்கலத்தைச் சோ்ந்த மகேஷ்வரன்(32), நடத்துநரான கரூா் மாவட்டம் தோகைமலை அருண்குமாா் (42) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT