உப்பிலியபுரம் பகுதியில் மது விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
உப்பிலியபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி ஆகிய கிராமங்களில் ரோந்து சென்றபோது பச்சப்பெருமாள்பட்டி பொ. இளவரசன் (34), நெட்டவேலம்பட்டி கு. ஜெயசந்திரன் (43) ஆகிய இருவரும் கூடுதல் விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.