திருச்சி

திமுகவில் இணைந்த அதிமுக தம்பதியா்

DIN

திருச்சி மாநகா் மாவட்ட அதிமுகவில் பொறுப்பு வகித்து வந்த தம்பதிகள் அமைச்சா் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனா்.

அதிமுக திருச்சி மாநகா் மாவட்ட மருத்துவரணி தலைவராக இருந்த கே.எஸ். சுப்பையா பாண்டியன். மாநகா் மாவட்ட மகளிரணி செயலராகவும், அதிமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்த இவரது மனைவி தமிழரசி ஆகியோா் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனா்.

திருச்சி தில்லைநகரில் கிளினிக் நடத்தி வரும் சித்த மருத்துவரான சுப்பையா பாண்டியன், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவராகவும் உள்ளாா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது வேட்பாளா் அறிவிப்பில் அதிருப்தியில் இருந்த சுப்பையா பாண்டியன், திருச்சி கிழக்குத் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்ட மனோகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகப் புகாா் எழுந்தது.

இந்நிலையில் இவா் சென்னை மயிலாப்பூரில் உள்ள திமுக முதன்மைச் செயலரும், நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு இல்லத்திற்கு வியாழக்கிழமை சென்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா்.

இதன் தொடா்ச்சியாக இவரது மனைவி தமிழரசி, திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை அமைச்சா் கே.என். நேருவை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டாா்.

அதிமுக மற்றும் அமமுகவினா் பரவலாக திமுகவில் இணைந்து வருகின்றனா். அந்த வகையில் அதிமுக தம்பதி திமுகவில் இணைந்தது திருச்சி அதிமுகவினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT