திருச்சி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

DIN

திருச்சி: திருச்சி அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள லஞ்சமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (49). கூலி தொழிலாளி. வெள்ளிக்கிழமை இரவு இவா் இருசக்கர வாகனத்தில் திருச்சியிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது இவரின் வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அப்பகுதியினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT