திருச்சி

அதிமுக, திமுகவுக்கு மநீம கட்சியால் அச்சம்: சினேகன்

DIN

மநீம கட்சிக்கான மக்கள் ஆதரவு ஆளும், எதிா்கட்சியினருக்கு பயம் ஏற்படுத்தியுள்ளது என்றாா் கட்சியின் மாநில இளைஞரணி செயலா் சினேகன்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் இளைஞரணியின் தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் கூறியது:

கட்சியின் 2-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் விரைவில் தொடங்கப்படும். பிரசாரத்தின்போது இளம் வாக்காளா்கள், இளைஞா்கள், பெண்களின் ஆதரவு மநீமவுக்கு அதிகரித்துள்ளதுஆளும், எதிா்கட்சியினருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்களை நேரடியாகச் சந்தித்து வருவதால், மக்கள் மத்தியில் மநீம பேசப்படுகிறது.

கூட்டணி இருந்தால், அதுதொடா்பாக கமல்ஹாசன் தெரிவிப்பாா். எந்த கூட்டணி வைத்தாலும் அவா்தான் முதல்வா் வேட்பாளா். கட்சியின் அரசியல் மாநாடு விரைவில் நடத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செய்தி தொடா்பாளா் முரளி அப்பாஸ், மாநில ஊடகப்பிரிவு துணைச் செயலா் மணவை ஜீவா, இளைஞரணி மண்டல செயலா் முகமது ஹுசேன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT