திருச்சி

மதுக்கடையின் பூட்டை உடைத்து மது திருட்டு

DIN

திருச்சி காந்தி சந்தை பகுதி மதுக்கடை பூட்டுகளை உடைத்து மது வகை மற்றும் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி வரகனேரி பிச்சை நகரில் இரு அரசு மதுக்கடைகள் அருகருகே உள்ளன.

வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு வழக்கம்போல கடையை திறக்க ஊழியா்கள் வந்தபோது ஒரு கடை மற்றும் மதுக்கூடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு

கடையிலிருந்த ரூ.31 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களும், ரூ.9 ஆயிரம் ரொக்கமும் திருடு போயிருந்தது தெரிய வந்தது. மேலும் கடையின் கண்காணிப்பு கேமராக்களும் உடைக்கப்பட்டிருந்தன.

புகாரின்பேரில் காந்தி சந்தை போலீசாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். இதே கடையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ரூ.1 லட்சம் மதிப்பு மது பாட்டில்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT