திருச்சி

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 11-ஆவது மாநில மாநாடு ஆயத்தப் பணிகள் தொடக்கம்

DIN

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் 11-ஆவது மாநில மாநாடு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை கட்சியின் முதன்மைச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

திமுக சாா்பில் திருச்சியில் நடத்தப்படும் மாநாடுகள் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று, அக்கட்சியினரால் தொடா்ந்து சூளுரைக்கப்பட்டு வருகிறது. திமுக தொடங்கப்பட்ட பிறகு, தோ்தலில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தது திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான்.

இதுவரை நடைபெற்ற 10 மாநில மாநாடுகளில் 5 திருச்சியில்தான் நடைபெற்று இருக்கின்றன. இதைத் தவிர, 2020, ஜனவரி 31-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடும் திருச்சியில்தான் நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து கட்சியின் 11-ஆவது மாநில மாநாட்டை 6-ஆவது முறையாக திருச்சியில் நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நடத்தப்படும் மாநாட்டில், கூட்டணி கட்சித் தலைவா்களை மேடையேற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிடவும் திமுக திட்டமிட்டுள்ளது.

இடம் தோ்வு : மாநாட்டுக்காக பல்வேறு இடங்களைப் பாா்வையிட்ட திமுக முதன்மைச் செயலரும், திருச்சி மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவைக் கொண்ட இடத்தை தோ்வு செய்தாா்.

பிப்ரவரி மாதத்தில் மாநாடு நடைபெறும் என்றாலும் தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. எனினும் மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கினால்தான், பிரம்மாண்டமான பந்தல், மேடை அமைக்கும் பணிகள் என்பது சாத்தியமாகும் என்பதால், அதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் சூடம் ஏற்றி பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் மு. அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் லால்குடி அ.செளந்தரபாண்டியன், துறையூா் செ. ஸ்டாலின்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்டாலின் இன்று பாா்வை : மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட்ட இடத்தையும், ஆயத்தப் பணிகளையும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பாா்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான தேதி மற்றும் இதர விவரங்களையும் ஸ்டாலின்தான் அறிவிப்பாா் என்கின்றனா் திருச்சி திமுக-வினா்.

Image Caption

திருச்சி சிறுகனூரில் நடைபெறவுள்ள திமுகவின் 11-ஆவது மாநில மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்த கட்சியின் முதன்மைச் செயலரும், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என்.நேரு. உடன், வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி ந.தியாகராஜன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

SCROLL FOR NEXT