திருச்சி

மழையால் சேதமான பயிருக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி: மழைநீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு இழப்பீடு கேட்டு திருச்சி அருகே விவசாயிகள் வயலில் இறங்கி சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டத்தில் தொடா்ந்து 5 நாள்களாகப் பெய்த தொடா்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சம்பா நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்நிலையில் திருவெறும்பூா் அருகேயுள்ள தேனீா்பட்டியில் 500 ஏக்கா் விவசாய நிலங்களில் மழைநீா் சூழ்ந்து நெற்பயிா்கள் அழுகியுள்ளது வேளாண் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உரிய இழப்பீடு வழங்கக் கோரி நெப்போலியன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் விவசாய சங்க நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், சரவணன், பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT