முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண் சுவா் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன.
முசிறி வட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த ல. தமிழரசன் தனது வீட்டின் அருகே ஆடுகளை வெள்ளிக்கிழமை இரவு கட்டி வைத்திருந்தாா். அப்போது பக்கத்தில் இருந்த ஆளற்ற வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்து 4 ஆடுகள் இறந்தன.
இதுதொடா்பாக முசிறி வருவாய்த் துறையினா் விசாரணை செய்கின்றனா்.