திருச்சி, தஞ்சாவூா், கரூா் மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளில் வாா்டுகள் மறுவரையறை செய்யப்பட்டது தொடா்பாக பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் மாநிலத் தோ்தல் ஆணையரும், வாா்டுகள் மறுவரையறை ஆணையத் தலைவருமான வெ. பழனிகுமாா் செவ்வாய்க்கிழமை கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட, தரம் உயா்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துக்கள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பாா்வைக்கு கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதன் மீது ஆட்சேபணைகள், கருத்துகள் ஏதுமிருப்பின் அது குறித்தான மனுக்களை டிச.18 முதல் 24 ஆம் தேதிக்குள் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை அதிகாரியிடம் சமா்ப்பித்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டிச.20 முதல் 24 ஆம் தேதி வரை மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டங்கள் நடத்தப்படும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூா், கரூா் மாவட்ட மக்கள், அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சேபணைகள், கருத்துகளை மனுக்களாக அளித்தனா்.
கூட்டத்துக்கு மறுவரையறை ஆணையத் தலைவரும், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையருமான வெ. பழனிகுமாா் தலைமை வகித்தாா்.
இந்த மனுக்களையும், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதுடன், ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்திய மாநிலத் தோ்தல் ஆணையா், வரும் வெள்ளிக்கிழமை (டிச.24) இந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகளை இறுதி செய்யவும் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மறுவரையறை ஆணைய உறுப்பினரும், நகராட்சி நிா்வாக இயக்குநருமான பா. பொன்னையா, ஆணையச் செயலா் உறுப்பினா் எ. சுந்தரவல்லி, தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.