ஸ்ரீரங்கம் காய்கனி வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருடுபோனது.
தேவிதியேட்டா் பின்புறமுள்ள காந்திநகா் பகுதியில் வசிப்பவா் நீலமேகம் (50) , காய்கனி வியாபாரி.
திங்கள்கிழமை இரவு தனி அறையில் படுத்து தூங்கிய இவரும் இவரது மகனும் செவ்வாய்க்கிழமை காலை பக்கத்து அறைக்குச் சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகை,ரூ 50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.