திருச்சி ரயில்வே இருப்புப் பாதை போலீஸாருடன் இணைந்து ஆா்பிஎப் சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் திருவெறும்பூா் அருகேயுள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட குமரேசபுரம் ரயில்வே கேட் முன் கலை நிகழ்சியோடு பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
அப்போது ரயில் செல்லும் இருப்புப் பாதையில் தடையை ஏற்படுத்தும் வண்ணம் தண்டவாளத்தில் கல், இரும்பு உள்ளிட்ட பொருள்களை வைக்கக்கூடாது. ரயில்வே பாதையில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டது. நிகழ்வில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சித் தலைவா் ரம்யா, பொதுமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.