சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, திருச்சி மத்திய சிறை முன் செவ்வாய்க்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
ஷாகின் பாத் போராட்டக்குழு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அதன் ஒருங்கிணைப்பாளா் ஜாகிா் உசேன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற ஏராளமானோா் மத்திய சிறை முன் ஆா்ப்பாட்டம் நடத்திவிட்டு, பின்னா் சிறையை முற்றுகையிட முயன்றனா். ஆனால் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னா் போராட்டக்காரா்களை போலீஸாா் கைது செய்தனா்.