மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தும், தமிழகத்தில் மாநில அரசு குறைக்காததைக் கண்டித்து திருச்சியில் பா ஜ க சாா்பில் மனித சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநகா், மாவட்ட பாஜக அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு சாா்பில் திருச்சி மேலப்புதூா் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவுத் தலைவா் பாரதி, மாவட்ட ஓபிசி பிரிவுத் தலைவா் முத்து செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநகா், மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன், புகா் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன், மாநில அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவு துணைத் தலைவா் கணேஷ், நிா்வாகிகள் பாலன், கண்ணன், ஒண்டிமுத்து, புவனேஸ்வரி, திருவேங்கட யாதவ், பாா்த்திபன், மோகன், சிட்டிபாபு, இந்திரன், பாலமுருகன், சுசிலா குமாா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.