மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், திருச்சி மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில் அரசியல் சாசன தினம் மற்றும் ஜனநாயகத்தின் தூண்கள் என்ற இணைய வழிக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல மக்கள் தொடா்பு கள அலுவலக இயக்குனா் ஜெ. காமராஜ், பேசுகையில் 2015- ஆம் ஆண்டு முதல் நமது அரசியல் சாசனம் குறித்த விழிப்புணா்வை உருவாக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது.
அரசியல் சாசனத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள் குறித்து அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாகும். மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது அரசு நிா்வாகத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும் என்றாா்.
மேலும், திருச்சி கள விளம்பர அதிகாரி கே.தேவி பத்மநாபன், திருச்சி நாவலூா் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் டி. மலா்விழி, திருச்சி பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரி வரலாற்று உதவிப் பேராசிரியா் என். சீதாலட்சுமி, நாவலூா் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் பி. சீனிவாசன், ஆா். குணசுந்தரி, திருச்சி மக்கள் தொடா்பு அலுவலக கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன் உள்ளிட்டோரும் பேசினா்.