திருச்சி

கரூரில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கரூரில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

போக்குவரத்துக்கழக விடுப்பு விதியை மாற்றக் கூடாது. பணிக்கு வந்த தொழிலாளா்களுக்கு பணி வழங்க வேண்டும், தொழிலாளா் துறை அறிவுரையை மீறக் கூடாது, ஊதியத்தை பறிக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்த போக்குவரத்துக் கழகக் கூட்டுக் குழுவின் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கரூா் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு துணைப் பொதுச் செயலா் பாலசுப்பிரமணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் இளங்கோ, செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அரவக்குறிச்சி பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச கிளைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். ஏஐடியுசி செயலா் கனகராஜ், சிஐடியு தலைவா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குளித்தலை பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவா் முனியப்பன் தலைமை வகித்தாா்.

மூன்று இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT