திருச்சி

தொட்டியத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொட்டியம் ஒன்றியக் குழு அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கிராம உதவியாளா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

2003, ஏப்ரல் 1-க்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தொட்டியம் வட்டக் கிளை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிளைப் பொருளாளா் தெய்வானை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய மேலாளா் அசோகன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இணைச் செயலா் ரேணுகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT