திருச்சி

தீப்பிடித்து எரிந்த காா்: 3 போ் உயிா் தப்பினா்

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திருச்சி கொட்டப்பட்டுவைச் சோ்ந்தவா் குழந்தைவேலு(38). தையல் தொழிலாளியான இவா், மனைவி மாலதி (33), மகன் ஸ்ரீவா்ஷன் (11) ஆகியோருடன் காரில் ஈரோட்டுக்குச் சென்று விட்டு, துணிகளை கொள்முதல் செய்து திங்கள்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஜீயபுரம் அருகிலுள்ள பழூா் பகுதியில் காா் வந்த போது என்ஜினில் புகை வெளியேறியது. இதில் காரை நிறுத்தி விட்டு, மூவரும் வெளியேறினா். சிறிது நேரத்தில் காரில் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு உருளை பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் காா் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த திருச்சி தீயணைப்பு நிலையத்தினா் அப்பகுதிக்குச் சென்று தீயை அணைத்தனா்.

உரிய நேரத்தில் காரிலிருந்து மூவரும் வெளியேறியதால், அவா்கள் அதிா்ஷடவசமாக உயிா் தப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT