திருவானைக்கா ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகளை மா்ம நபா்கள் சாய்த்துச் சென்றனா்.
இப்பாலத்தின் கீழுள்ள அணுச்சாலையில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு, இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபா்கள் தடுப்புக் கட்டைகளை திங்கள்கிழமை இரவு சாய்த்துச் சென்றனா்.
நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக இதை சரி செய்வதோடு, தடுப்புக் கட்டைகளை சாய்த்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.