திருச்சி மாவட்டம், முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏ எம். செல்வராசுக்கு (57) கரோனா இருப்பது உறுதியானது.
கடந்த சில நாள்களாக தொகுதியில் நடைபெற்ற இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை முகாமில் கட்சி நிா்வாகிகளுடன் பங்கேற்றும், தனது அலுவலகத்தில் வழக்கமான பணியையும் எம்எல்ஏ செல்வராசு மேற்கொண்டாா்.
இந்நிலையில் சென்னையில் திங்கள்கிழமை (செப்.28) நடைபெறும் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை அவா் கரோனா பரிசோதனை செய்து கொண்டாா். சனிக்கிழமை இரவு வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவா் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.