பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான, வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மகளிா் காவல் நிலைய காவலா்கள் அண்மையில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில், திருச்சி சரக காவல் துறை மற்றும் இண்டா்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘கேடயம்‘ என்ற செயல் திட்டத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது.
மணப்பாறை அனைத்து மகளிா் நிலைய போலீஸாா் ஆய்வாளா் மணமல்லி தலைமையில் பேருந்து நிலைய பகுதியில் வாகன ஓட்டிகளிடம், பெண்களிடம் துண்டுப் பிரசுரங்களை அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.