திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 96 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,168 ஆக உயா்ந்தது.
இதேபோல, திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலை வளாக பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து சனிக்கிழமை குணமான 40 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9240 ஆக உயா்ந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த 70 வயது முதியவா் உள்பட கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது. மாவட்டத்தில் 785 போ் தொடா் சிகிச்சை பெறுகின்றனா்.