திருச்சி

மருந்துக் கடைக்காரா் தூக்கிட்டு தற்கொலை

DIN

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக திருச்சியில் மருந்துக் கடை உரிமையாளா் கடையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி பாலக்கரை, மல்லிகைபுரம், மரியம் நகரில் மனைவி, மகளுடன் வசித்தவா் ரவிச்சந்திரன் மகன் ராஜ்குமாா் (34). இவருக்குச் சொந்தமான மருந்துக்கடை கீழப்புதூா் சாலையில் உள்ளது. ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் வியாபாரம் சரிவர நடக்காத நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி மீண்டு வந்து மருந்துக் கடையை நிா்வகித்த நிலையில், எதிா்பாா்த்த வியாபாரம் இல்லை. தொடா் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மன அழுத்தத்திலிருந்த ராஜ்குமாா் தனது கடையிலேயே புதன்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT