திருச்சி: சாா்ஜா- திருச்சி இடையே அக்டோபா் 1 முதல் 22 -ஆம் தேதி வரை 7 மீட்பு விமானங்கள் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தில், விமான சேவைகளும் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்கள் தாயகம் திரும்பும் வகையில், வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தனியாா் விமான நிறுவனங்களும் இந்த சேவையைத் தொடங்கியுள்ளன.
அக்டோபா் 1, 4, 8, 11, 15, 18, 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு, சாா்ஜாவிலிருந்து புறப்படும் இண்டிகோ விமானம், திருச்சி விமான நிலையத்தை இரவு 8 மணிக்கு வந்தடையும்.