திருச்சியில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 9,460 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 92 பேருக்கு தொற்று உறுதியாகி, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,552 ஆக உயா்ந்தது. மேலும், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று ஞாயிற்றுக்கிழமை குணமான 38 போ் உள்பட மொத்தம் 8,645 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 139 போ் உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாமில் 768 போ் சிகிச்சை பெறுகின்றனா்.