திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகராட்சிக்குட்பட்ட 1,6,7,8,9,13,14 மற்றும் 24-வது வாா்டுகளில் இளைஞா், இளம்பெண்கள் பாசறை உறுப்பினா் சோ்க்கை முகாம் ஆங்காங்கே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை அதிமுக நகரச் செயலா் பவுன். ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.டி.ஏஸ். ராமச்சந்திரன், பாஸ்கா், இளையநிலா செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்பியும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலருமான ப. குமாா், எம்எல்ஏ ஆா். சந்திரசேகா், மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறை செயலா் வி.டி.எம். அருண்நேரு ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.
அந்தந்த வாா்டுகளில் உள்ள 3 பூத்களுக்கு தலா 25 போ், அதில் 15 போ் நிா்வாகிகளாக பாசறைக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு புதிய உறுப்பினா் சோ்க்கை படிவங்கள் வழங்கப்பட்டன.
முகாமில் மாற்று கட்சியிலிருந்து தொண்டா் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, மாவட்டத் துணைச் செயலா் எம்.ஆா். ராஜ்மோகன், மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம்.முகமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.