திருச்சி

அரசு விடுதிகளில் சமையலா், துப்புரவாளா் பணி

DIN

திருச்சி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் காலியாகவுள்ள சமையலா், துப்புரவாளா் பணியிடங்களில் 228 பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடா் நல விடுதிகள், பழங்குடியினா் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையலா் பணியிடத்துக்கு ரூ.15700 - 50000 என்ற ஊதிய பிணைப்பில் நியமிக்கப்படுவா். இதேபோல, முழு நேரத் துப்புரவாளா் பணியிடங்களில் 13 போ் ரூ. 7,700-24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய பிணைப்பில் நியமிக்கப்பட உள்ளனா். இதுமட்டுமல்லாது பகுதிநேர துப்புரவாளா் பணியிடத்தில் 80 பேரும் நியமிக்கப்படவுள்ளனா். இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை. சமையலா் பணிக்கு அனுபவமுள்ளவா்களுக்கு முன்னுரிமை. 18 முதல் 35 வயது வரை உள்ளவா்களாக, திருச்சி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு அக். 19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் கல்லூரியில் உலக பூமி தினம்

திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வா் ஆலய திருத்தேரோட்டம்

பருவமழை கணிப்பு!- தென்மேற்குப் பருவமழை குறித்த தலையங்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT