திருச்சி, செப்.18: திருச்சியில் மேலும் 136 பேருக்கு கரோனா இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,363 ஆக உயா்ந்துள்ளது. இதேபோல, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து வெள்ளிக்கிழமை குணமடைந்த 28 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 8,431 ஆக உயா்ந்துள்ளது. திருச்சியைச் சோ்ந்த 70 வயது ஆண், 76 வயது ஆண், 66 வயது ஆண் என மூவா் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 137 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 795 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.