திருச்சி

மநீம பேரவைத் தொகுதி அலுவலகம் திறப்பு

DIN

மணப்பாறையில் மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்சி தென்மேற்கு மாவட்டச் செயலா் ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில செயலா் அருண் சிதம்பரம், ஊடகப்பிரிவு மாநில துணை செயலா் மணவை ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் பொதுச்செயலா் முருகானந்தம் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

விவசாய அணி மாநில துணைச் செயலா் ராஜசேகா், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக மாநில துணை செயலா் செந்தில்குமாா், திருச்சி மத்திய மாவட்ட செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்வில் ஏராளமானோா் கட்சியில் இணைந்தனா். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நகரச் செயலா் ஜெகன், ஜோதிபாசு, ஒன்றிய செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT