மணப்பாறையில் மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
திருச்சி தென்மேற்கு மாவட்டச் செயலா் ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில செயலா் அருண் சிதம்பரம், ஊடகப்பிரிவு மாநில துணை செயலா் மணவை ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் பொதுச்செயலா் முருகானந்தம் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தாா்.
விவசாய அணி மாநில துணைச் செயலா் ராஜசேகா், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக மாநில துணை செயலா் செந்தில்குமாா், திருச்சி மத்திய மாவட்ட செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்வில் ஏராளமானோா் கட்சியில் இணைந்தனா். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நகரச் செயலா் ஜெகன், ஜோதிபாசு, ஒன்றிய செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் செய்தனா்.