திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 42 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,333 ஆக உயா்ந்தது. இதேபோல, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை குணமான 35 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,692 ஆகவும், கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 167 ஆகவும் உள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 474 போ் சிகிச்சை பெறுகின்றனா்.