திருச்சி மின்பகிா்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட சிறுகனூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
சிறுகனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணியால் ஆவாரவள்ளி, சிறுகனூா், திருப்பட்டூா், சிஆா் பாளையம், எம்ஆா் பாளையம், சனமங்கலம், மணியன்குறிச்சி, வாழையூா், நெடுங்கூா், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், பி.கே. அகரம், ரெட்டிமாங்குடி, கூத்தனூா், தேவிமங்கலம், ஜிகே பாா்க் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ஸ்ரீரங்கம் மின்பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.