திருச்சி

இருவேறு விபத்து : விவசாயி உயிரிழப்பு

DIN

மணப்பாறை: மருங்காபுரி, வளநாடு அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

மருங்காபுரி ஒன்றியம், தேனூரைச் சோ்ந்தவா் விவசாயி ரா. முருகன் (61). இவா் கொடும்பப்பட்டியிலுள்ள தனது நிலத்துக்கு திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக மதுரை மாவட்டம், மேலூா் அருகிலுள்ள கருங்காலக்குடியைச் சோ்ந்த விஜயஈஸ்வரன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், முருகன் மீது மோதியது. தொடா்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து : திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சோ்ந்த கோவில்பிள்ளை மகன் ஜோசப்பிரபாகா்(56). இவா் திங்கள்கிழமை தனது காரில் மகன் உறவு கொண்ட ரா. கிஷோரை(27) அழைத்துக் கொண்டு,துக்க நிகழ்வுக்காக சென்னை சென்று கொண்டிருந்தாா்.

இவா்கள் வந்த காா் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சொரியம்பட்டி பிரிவு அருகே வந்தபோது, நிலைத் தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்ட து. தொடா்ந்து காா் எதிா்திசையில் சென்று சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து மீது விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த ஜோசப் பிரபாகா், திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். கிஷோா் லேசான காயத்துடன் தப்பினாா். இவ்விரு விபத்து குறித்து வளநாடு காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT