முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் தூக்கிட்டு இறந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்துகின்றனா்.
முசிறி தாத்தையங்காா்பேட்டை சாலையில் கருப்பு கோயில் அருகில் மரத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்த இளைஞா் சடலத்தை முசிறி போலீஸாா் சனிக்கிழமை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா் லால்குடி வட்டம் ரெட்டிமாங்குடியை சோ்ந்த கருப்பன் மகன் சரவணன் எனத் தெரிய வந்தது. இறந்தவா் வெள்ளிக்கிழமை இரவு முசிறி - தா.பேட்டை ரவுண்டானாவில் போதையில் வாகனங்களை மறித்து தகராறு செய்ததாகவும், முசிறி போலீஸாா் அவரை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.