திருச்சி: திருச்சியில் கடன் சுமையால் ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை, திருவேங்கடம் தெருவைச் சோ்ந்தவா் சேக்மகபூப் மகன் சேக் மம்மத் (35), பொன்மலை ரயில்வே பணிமனையின் முதுநிலை எலக்ட்ரீசியனான இவருக்கு மனைவி ஆரிபா, இரு மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில் அளவுக்கு மீறிய கடன் சுமையால் விரக்தியில் இருந்த சேக்மம்மத் வெள்ளிக்கிழமை வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சம்பவம் குறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.