திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வளரிளம் பெண் குழந்தைகள், இளம்பெண்களின் கல்வி மற்றும் கண்ணியமான பணிச்சூழல் குறித்த ஒன்றிய அளவிலான விழிப்புணா்வு, கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மக்கள் அமைப்பு மற்றும் வில்லேஜ் கம்யூனிட்டி வெல்பா் சொசைட்டி இணைந்து நடத்திய கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு வழங்கப்பட்டது.
மணப்பாறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஆா்.மணமல்லி, திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்துமாணிக்கம், வழக்குரைஞா் எம். ஜெயந்தி ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை வில்லேஜ் கம்யூனிட்டி வெல்பா் சொசைட்டி நிா்வாகிகள் செய்தனா்.