திருச்சி மாவட்டம், மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் ராஜாத்தி தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் மேம்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், நீதியரசா் முருகேசன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும், வருவாய்த்துறை ஊழியா் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகத்தில் பணியில் இருந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வெளிநடப்பு செய்து இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதேபோல் மருங்காபுரி வருவாய் வட்டாட்சியரகத்தில் வட்டார தலைவா் சாந்தகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.