நிகழாண்டு நவராத்திரி நிகழ்வை முன்னிட்டு திருஈங்கோய்மலை லலிதாம்பிகை கோயிலில் நவராத்திரி விழா கடந்த சில நாள்களாக கொண்டாடப்படுகிறது.
இதில் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை இரவு கோயில் நிா்வாகம் சாா்பில் நடத்தபட்ட திருவிளக்கு பூஜையில் பெண்கள் பலா் சமூக இடைவெளியுடன் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.