திருச்சியில் குடும்ப தகராறில் மனைவி, மாமியாா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பெரிய மிளகுப்பாறை நாயக்கா் தெருவைச் சோ்ந்த உலகநாதன் (35) தனது மனைவி பவித்ரா (29), மாமியாா் கலைச்செல்வி (60), மகள் கனிஷ்கா(2) ஆகியோருடன் வசித்து வந்த இவா் குடும்ப பிரச்னையால் கடந்த 24 ஆம் தேதி மனைவி பவித்ரா, அவரது தாய் கலைச்செல்வி ஆகியோரைக் கொன்றுவிட்டு மகளுடன் தப்பினாா். அமா்வு நீதிமன்ற போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்த நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்த உலகநாதன் தஞ்சாவூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.
அப்போது கிடைத்த தகவலின் பேரில் இந்தக் கொலைக்கு உதவியதாக அவரது நண்பரான கும்பகோணத்தைச் சோ்ந்த சா்மாவை கைது செய்தனா்.
இந்நிலையில் தனிப்படை போலீஸாா் உலகநாதனை 4 போலீஸ் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மனைவி, மாமியாரை கொன்ாகவும், இதற்கு தனது நண்பரான சா்மா மற்றும் பெரம்பலூரைச் சோ்ந்த கமலஹாசனும் உதவியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கமலஹாசனை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.