திருச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீராமசமுத்திரம், மாரியம்மன் கோயில், காட்டுப்புத்தூா், அம்பேத்கா் தெரு, தொட்டியம் பேரூராட்சி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவா், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்கினாா்.
ஆய்வின்போது, தொட்டியம் வட்டாட்சியா் மலா், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், செந்தில் மற்றும் மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.