மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உயிரிழந்த ‘சலகா் மாடு‘ என்னும் வழிபாட்டு காளைக்கு சனிக்கிழமை தாரை தப்பட்டை, தேவராட்டத்துடன் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனா்.
மணப்பாறை அடுத்த வடக்குஅம்மாபட்டியில் வசித்துவரும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் நாராயணன் 24 ஆண்டுகளாக வளா்த்து வந்த எருது வெள்ளிக்கிழமை வயது முதிா்வால் உயிரிழந்தது. அந்த எருதுக்கு படையல் வைத்து அலங்கரிக்கப்பட்டு ஒப்பாரி வைத்து அவா்களின் குலவழக்கப்படி தேவராட்டம் நடைபெற்று, அடக்கம் செய்யப்பட்டது.