திருச்சி

காட்டுப்புத்தூரில் லாட்டரி சீட்டு விற்ற 6 போ் கைது

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தொட்டியம் காவல் சரகம் காட்டுப்புத்தூா் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் எஸ்.ஐ. நாகராஜன் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வெளி மாநில லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த காட்டுப்புத்தூா் பகுதி மாவிளிபட்டியைச் சோ்ந்த குணசேகரன் (55), ராஜேந்திரன்(40), நத்தம் கண்ணன் (44), பாண்டமங்கலம் விஜயக்குமாா் (47) காட்டுபுத்தூா் குமாா் (47) மற்றும் டினோபரமேஷ் (32) ஆகிய 6 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, வெளிமாநில லாட்டரிகள் ரூ. 6,750 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT