காணாமல் போன மாணவியைக் கண்டுபிடித்து தரக்கோரி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை பெற்றோா், மாதா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் குஜிலியம் தோப்பு பகுதியை சோ்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 20 ஆம் தேதி முதல் காணவில்லை என ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாணவியை விரைந்து கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோா்களுடன் மாதா் சங்க மாவட்ட செயலா் ஆயிஷா தலைமையில் 25 க்கும் மேற்பட்டோா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.